tamilnadu

img

ஆட்சியில் இல்லாதபோதும் ஆட்சியில் இருப்பது போல் பணி செய்தோம்.... அரண்மனைப்புதூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு....

தேனி:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரண்மனைப்புதூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர். அதில் ஸ்டாலின் பேசுகையில் “உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சி தான் அராஜகம் செய்வார்கள். ஓட்டுஎண்ணும் இடத்திலும் அக்கிரமம் செய்வார்கள். அதனை மீறி 70சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்கு காரணம் மக்கள் தான். ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளில், ஆட்சியில்இருப்பது போல நாங்கள்தான்மக்களுக்காக பணியாற்றியிருக் கிறோம். கொரோனா தொற்று நோயால் பலரையும் இழந்திருக்கிறோம். 8லட்சம்பேர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக் கானோர் இறந்துபோனார்கள். அப்படிப்பட்ட கொடிய நோய் பற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. தடுப்பூசி போடவேபயப்படுகிறார்கள். சந்தேகப்படு கிறார்கள். இப்படியான நிலையில், உயிரையே பணயம் வைத்து, ஒன்றிணைவோம் வா இயக்கம் மூலம் மக்களுக்காக களத்தில் நின்றார்கள். மருந்து மாத்திரை, மளிகை, உணவு என மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு செயல்பட்டது தி.மு.க. ஆட்சியில் இருப்பது போல செயல்பட்டோம். 

இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓ.பி.எஸ்க்கு மூன்று முறை முதல்வர் பதவி கிடைத்தது. மூன்று முறை முதல்வராக இருந்து, நாட்டு மக்களுக்கு என்ன செய்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்குனு சொன்னார். என்ன மர்மம்னு அவரும் சொல்ல, ஆளும் கட்சியினரும் சொல்லல. ஜெயலலிதா நினைவிடத்தில் 40நிமிடம் தியானம் செய்தார். நீதி விசாரணை கேட்டது நாங்கள் இல்லை. இறப்பில் மர்மம் இருக்குனு சொன்னதுநான் இல்ல. ஆறுமுகசாமி விசாரணை கமிசன் அமைத்து மூன்று வருடத்தை தாண்டியாச்சு. என்ன ஆச்சுனு தெரியல. விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி, எட்டுமுறை கூப்பிட்டும் இவர் போகவில்லை.பாக்கெட்டுல, டேபிள்ல ஜெயலலிதா படத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள். யார் விட்டாலும் ஸ்டாலின் விட மாட்டான்.

போடிநாயக்கனூர் மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டுவரவில்லை.சங்கராபுரம் பகுதியில் சிப்காட்டிற்கு பூமி பூஜை மட்டுமே போடப்பட்டுள்ளது.குமுளி போக்குவரத்து பணிமனை இல்லை. அரண்மனை புதூர், கொடுவிலார்பட்டி. நாகலாபுரம் போன்ற பகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட வில்லை. குரங்கனி டாப்ஸ்டேசன் போன்ற பகுதிகளில் விளையும் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு சாலை வசதி இல்லை. அதிமுக ஆட்சியில் சிலிண்டர், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது என்றார்.

;