tamilnadu

img

ஐதராபாத்தில் 2 ரயில்கள் மோதல் - 30 பேர் படுகாயம்

ஐதராபாத்தில் 2 ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் கச்சிகுடா ரயில் நிலையத்தில் கோவையில் இருந்து தில்லி நிஜாமூதின் செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 10மணியளவில் நின்று கொண்டிருந்தது. அப்போது மின்சார ரயில் திடீரென மோதியது. இந்த விபத்தில் சுமார்  30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இந்த நிலையில், ஐதராபாத் நகரில் லிங்கம்பள்ளியில் இருந்து பலக்னுமா செல்லும் ரெயிலின் 3 பெட்டிகள் மற்றும் கர்னூல் நகரில் இருந்து செகந்திராபாத் செல்லும் ஹண்ட்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகளும் தடம் புரண்டன.  இதில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.