tamilnadu

img

குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை  

குற்றாலம் அருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  

இந்த நிலையில் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால பிரதான அருவி, மெயின் அருவி,ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்தால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.  

தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.