tamilnadu

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை... இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்....

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில்மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்அ.ஞானகௌரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடிமாவட்டத்தில் குழந்தைகளுக் கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2021-22 ஆம் கல்வியாண்டில் அனைத்துசிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக் கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கஅரசு உத்தரவிட்டு உள்ளது.அதன்படி மாணவா்கள் சேர்க்கை விண்ணப்பத்தை ஜூலை 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரைrte.tnschools.gov.in இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். எல்.கே.ஜி. சேர்க்கைக்கு 31.07.21 அன்று 3 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். பெற் றோர் கள் இணையதளம் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும்மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு கீழ் உள்ள அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். மனுதாரரின் இருப்பிடத்தில் இருந்து பள்ளி அமைவிடம் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். குழந்தைகளின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்று, மருத்துவமனை, அங்கன்வாடி பதிவேடுநகல், பெற்றோர், பாதுகாவலரால் வயது நிரூபிக்க எழுத்துமூலம் அளிக்கப்பட்ட உறுதிமொழி, பெற்றோர் ஆதார் அட்டைநகல், ரேஷன் அட்டை நகல், சாதி, வருமானச் சான்றிதழ் நகல்ஆகியவற்றுடன் இணையதளமுகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

;