tamilnadu

img

பாராட்டு விழா

 தூத்துக்குடி, செப்.15-  தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆ.ஜெயா சண்முகம் நல்லாசிரியர் விருது பெற்றதற்கு தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண - சாரணிய இயக்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. தூத்துக்குடி சாந்திநகர் கோல்டன் நர்சரி பிரைமரி பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு இயக்க மாவட்ட ஆணையர் ரா.சண்முகம் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட பயிற்சி ஆணையர் சரவணன் வரவேற்று பேசி னார். விழாவில் விருது பெற்ற மாவட்டச் செயலாளர் எட்வர்ட் ஜான்சன்பால், மாவட்ட அமைப்பு ஆணையர் வள்ளி யம்மாள், திருச்செந்தூர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ், கோவில்பட்டி மாவட்டப் பொருளாளர் நடராஜன் ஆகியோ ரின் சேவையை பாராட்டி அனைவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.