tamilnadu

img

தியாகி ஜெ.நாவலன் நினைவு தினம்.... திருமீயச்சூரில் சிபிஎம், விவசாயிகள் சங்கம், வாலிபர் சங்கத் தலைவர்கள் வீரவணக்கம்...

குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம்அருகே உள்ள திருமீயச்சூரில் உள்ள தோழர் தியாகி ஜெ.நாவலனின் நினைவு இடத்தில் பத்தாம் ஆண்டு நினைவு தினம், வீரவணக்கம், பொதுக்கூட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நன்னிலம் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை வகித்தார். திருமீயச்சூரில் உள்ள தியாகி நாவலன் நினைவு இடத்தில் அமைக்கப்பட்ட ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் செங்கொடியை ஏற்றி உரையாற்றினார். வீரவணக்க பொதுக்கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், கவிவர்மன் மற்றும் வாலிபர் சங்கத்தின்மாநிலத் தலைவர் ரெஜிஸ்குமார் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், நா.பாலசுப்பிரமணியன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமாரராஜா ஆகியோர் ஜெ.நாவலன் தியாகத்தைப் போற்றி புகழ் அஞ்சலி உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.முருகையன், தலைவர் இரா.மாலதி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கோமதி உள்ளிட்ட கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், வெகுஜன அரங்க நிர்வாகிகள், வாலிபர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கொல்லுமாங்குடி கடைவீதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தலைவர்கள் வழி நடத்தலுடன் பேரணியாக புறப்பட்டு பேரளம் கடைவீதியை கடந்து திருமீயச்சூர் தியாகி நாவலன் நினைவிடத்தில் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.குடவாசல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தோழர் தியாகி ஜெ.நாவலன் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்தரன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஆர்.லெட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.

;