திருவாரூர், அக்.22- மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஒப்பந்த ஊழியர்களாக 15 வருடங்களுக்கு மேலாக மின் வாரி யத்தில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழி யர்களை அடையாளங் கண்டு அவர் களுக்கு நாள் ஒன்றுக்கு 360 ரூபாய் ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும், அனைத்து ஒப்பந்த ஊழியருக்கும் தீபா வளி போனஸ் அறிவித்து வழங்கிட வலி யுறுத்தியும் திருவாரூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் திட்ட து.தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமையிலும், திட்ட துணைத் தலைவர் ஆர்.ராமசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முரு கையன், மின் வட்ட கிளையின் செய லாளர் கே.ராஜேந்திரன், நிர்வாகி கள் எஸ்.ஜெயச்சந்திரன், ஜி.வீர பாண்டியன், டி.தமிழரசன், ஆர்.முரளி தரன், கெ.வினோத், ஜெ.பிரபு, கோபால் சாமி, சந்திரசேகர் ஆகியோர் பேசி னார்கள். இருநூற்றூக்கும் அதிக மான ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர்.