திருத்துறைப்பூண்டி, ஜூலை 21- லிகாய் சங்க திருவாரூர் மாவட்ட மாநாடு திருத்துறைப் பூண்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலை வர் தலைமை வகித்தார். புதிய மாவட்ட தலைவராக வி. செல்வசேகரன், செயலாளராக பி.மாதவவேலன், பொரு ளாளராக பி.இராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சி.ஐ.டி.யு சங்க மாவட்ட செயலாளர், புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். தெற்கு கோட்ட தலைவர் அன்பு.நடராஜன், தஞ்சை கோட்ட பொதுச்செயலாளர் ஜி.கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.