tamilnadu

img

சோலை சுந்தர பெருமாள் மறைவு... தமுஎகச, சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி...

குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திலுள்ள காவனூர் கிராமத்தில் வகித்து வந்த தமிழக முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு அழைப்பாளர், எழுத்தாளர் சோலை சு.சுந்தரபெருமாள் செவ்வாய்க்கிழமை  மாலைகாலமானார். 

அவரது மறைவு செய்தி அறிந்து தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, துணை பொதுச்செயலாளர் களப்பிரன், மாவட்ட செயலாளர் பகவான் ராஜ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்  ஐ.வி.நாகராஜன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி,நாகை மாவட்ட செயலாளர் நாகை மாலி மற்றும் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே.சீனிவாசன் உள்ளிட்ட தோழர்கள் மறைந்த தோழர் சோலை சுந்தரபெருமாள் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு தமுஎகச திருவாரூர் மாவட்டத் தலைவர் தா.தமோதரன் தலைமை வகித்தார்.கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.சௌந்தரராஜன், இலக்கியவளர்ச்சிக் கழகத்தின் என்கண் மணி,தீக்கதிர் மாவட்டச் செய்தியாளர் நவமணி, மற்ற தோழமை அரங்கத்தின்பொறுப்பாளர்கள், தமுஎகச தஞ்சை,நாகை, திருவாரூர்  மாவட்ட, மாநில நிர்வாகிகள் இரங்கல்  உரையாற்றினர். புதன்கிழமை மதியம் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் சிபிஎம் தோழர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுஅஞ்சலி செலுத்தினர்.

;