மன்னார்குடி, நவ.14- திருவாரூர் அருகில் உள்ள அம்மை யப்பனில் இயங்கி வரும் பாரத் கல்வி யியல் கல்லூரியில் வாசிப்பு இயக்க மும், நூல் வெளியீட்டு விழாவும் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் தலைமை வகித்தார். தாளா ளர் காலை கதிரவன், எழுத்தாளர் ஐ.வி. நாகராஜன் எழுதிய நீதியின் குரல் நூலின் இரண்டாம் பதிப்பினை வெளியிட வழக்கறிஞர் கதாக.அரசுதாயுமானவன் பெற்றுக் கொண்டார். மாவட்ட நூலகரும், வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான மா.ஆசைத் தம்பி வாசிப்பு குறித்து மாணவர்க ளிடையே பேசினார். வழக்கறிஞர் ஐவிஎன்.இன்குலாப் வாழ்த்துரை வழங் கினார். நிறைவாக மாணவர்களின் எதிர் காலமும், பெற்றோர்களின் கனவும் என்ற தலைப்பில் நூல் ஆசிரியரும், ஊடகவியல், கட்டுரையாளருமான ஐவி. நாகராஜன் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரி யர்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர்.