குடவாசல்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை யொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நன்னிலம் ஒன்றியம் பேரளம் கடைவீதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பி.ஜெயசீலன் தலைமை தாங்கி னார். ஒ.து.செயலாளர் வரத.வசந்தராஜன் முன்னிலை வகித்தார் மாவட்ட பொருளாளர் எஸ்.இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒ.தலைவர் வரத.வசந்தபாலன், ஒ.பொருளாளர் எஸ். சுரேந்தர், ஆர்.விஜய், டி.ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் தியாகு. ரஜினிகாந்த், ஒ.குழு உறுப்பினர்கள் மற்றும் விசிக கட்சியினர் கலந்து கொண்டனர்.