tamilnadu

img

திருத்தணி கோயில் கலசம் மாயம்

திருத்தணி முருகன் கோயில் நுழைவு வாயில் இருந்த கோயில் கோபுர கலசம் மாயமானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
திருத்தணி முருகன் கோயிலுக்கு மலைப்படிகள் மூலம் பக்தர்கள் நடந்து செல்லும் மாட வீதி நுழைவு வாயிலில் ஒரு காளி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 3 கலசங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது திடீரென ஒரு கலசம் மாயமாகி உள்ளது. மேலும் கோபுரத்தில் உள்ள சில சிலைகளும் ஆங்காங்கே சேதப்படுத்தப்பட்டுள்ளது. 
இந்நிலையில் காற்றின் வேகம் காரணமாக கலசம் கீழே விழுந்ததாகவும் அதை எடுத்து வைத்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.