tamilnadu

img

வாக்குச்சீட்டுகளுக்கு தீ வைப்பு: 50 பேர் மீது வழக்கு பதிவு

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக 50 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளின் பின்புறம் தேர்தல் ஆணையம் பதித்திருந்த முத்திரை, முன்புறம் ஒரு குறிப்பிட்ட சின்னத்தின் மீதும் பதிவாகியிருந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் வாக்குப் பதிவு மையத்துக்குள் புகுந்த சிலர் வாக்குப்பெட்டிகளை கைப்பற்றி வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைத்தனர்.இது தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக சனிக்கிழமையன்று 50 பேர் மீது வல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மறு வாக்குப் பதிவு குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

;