திருவண்ணாமலை, ஜூலை 23- திருவண்ணாமலை மாவட்டம், மெய்யூர் அடுத்த, மேல்கச்சிராப்பட்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மேல்கச்சிராப்பட்டு கிராமத்திலிருந்து திருவண்ணாமலை யில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள், பொது மக்கள் தினசரி சென்று வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு பேருந்து வசதியில்லை. மேல்கச்சிராப்பட்டு கிராமத்தி லிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள, கீழ்க் கச்சிராப்பட்டு கிராமத்திற்கு நடந்து வந்து, அங்கிருந்து பேருந்தில் ஏறி திரு வண்ணாமலைக்குச் சென்று வரும் நிலை உள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்படுகின்ற னர். எனவே, மேல்கச்சிராப்பட்டு கிராமத்தில் இருந்து, திரு வண்ணாமலைக்கு பேருந்து இயக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.