tamilnadu

img

விபத்து ஏற்படுத்தும் தடுப்புசுவரை அகற்ற கோரிக்கை

திருவண்ணாமலை,மே 16-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் - போளூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த தடுப்புச் சுவர் மீது, கரூரிலிருந்து செய்யாறு பகுதிக்கு பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதி விபத்துக்குள் ளானது. வாகன ஓட்டிகளுக்கு எவ்வித பயனும் இல்லாத தடுப்புச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என, செங்கம் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் முதல் போளூர் சாலை வரை தடுப்பு சுவர் எழுப்பி உள்ளது. இந்த தடுப்பு சுவரால் தினமும் விபத்து நடந்தது வருகிறது. இந்த தடுப்பு சுவர் என்பது, முறையாக சாலையை அகலப்படுத்தி, போட்டு இருக்க வேண்டும். ஆனால் குறுகலான சாலையில், தடுப்பு சுவர் எழுப்பியுள்ளதால், இந்த சாலையில் பயணம் செய்யும் மக்களுக்கு பிரச் சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். கடந்த வாரம் கோயம்புத்தூரில் இருந்து வேலூர் தங்க கோவிலுக்கு சுற்றுலா சென்றிருந்த ஆம்னி பேருந்து, இந்த தடுப்புச்சுவரில் மோதியவிபத்தில், பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.