tamilnadu

img

அடிப்படை வசதிகள் கோரி மறியல்

திருவண்ணாமலை, டிச. 4- திருவண்ணாமலை மாவட்டம் செங் கத்தை அடுத்துள்ள பக்கிரிபாளையம் பகுதி யில் அடிப்படை வசதிகள் கோரி, பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். பக்கிரபாளையம் பகுதி மக்களுக்கு தொடர்ந்து பல மாதங்களாக குடிநீர் சரிவர  வழங்கப்படுவதில்லை. மழைநீர், கழிவுநீரு டன் கலந்து தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு  ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டு தெரி வித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  செங்கம் போலீசார் மற்றும் அரசு அலுவலர்  கள், மக்களின் அடிப்படை பிரச்சணைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தெரி வித்ததையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

;