திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தின் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் வ.செயராமன் மகனும் வழக்கறிஞர் இடைக்குழு செயலாளருமான ஜெ.பிரதாப்-யாமினி திருமணம் ஆரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. மண மக்களுடன் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், எம்.வீரபத்திரன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், மூத்த வழக்கறிஞர் ரங்கராமானுஜம் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ச.பாரி, க. பிரபு உள்ளிட்டோர் வாழ்த்தினர்.