திருவண்ணாமலை, ஆக. 1- திருவண்ணாமலை காந்திநகர் 8ஆவது தெருவில் சாலையின் நடுவில் மிகப்பெரிய பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி யின் வாசல் பகுதியில் இந்த பள்ளம் இருப்ப தால் தினசரி ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். எனவே விபத்து ஏற்படும் அபாயம் உள்ள தாக பெற்றோர் கள், பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பள்ளத்தை, உடனடி யாக மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.