tamilnadu

img

அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்காத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 25– திருப்பூர் மாநகராட்சி வார்டு மறு வரைப்படி புதிய 7 மற்றும் 8 ஆவது வார்டுகளில் மக்களின் அடிப்படை பிரச் சனைகளைத் தீர்க்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. உப்புத் தண்ணீர் வசதியை விரிவாக்க வேண்டும். அனைத்து பகுதிக்கும் குடிநீர்க் குழாய் அமைத்திட வேண்டும். சாக்கடை அடைப்புகள் நீக்கப்பட வேண்டும். புதிய வடிகால் வசதி செய்து தர வேண்டும். சாலைகள் அமைத்துத் தர வேண்டும். ஆதி திராவிட மக்கள் மயானப் பாதையைச் சீரமைப்பு செய்திட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சக்திநகர் கிளை  சார்பில் 2 ஆம் மண்டல அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சிக் கிளைச் செயலாளர் மகேஸ்வரன் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே. பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.என்.நடராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதன்பின்னர், மண்டல சுகாதார அலுவலர் மற்றும் உதவிப் பொறி யாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ச.நந்தகோபால், குருவாயூ ரப்பன் நகர் கிளைச் செயலாளர் செல்வ குமார், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் அருள் உள்பட பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.