tamilnadu

img

திருப்பூர்: சாலை விபத்தில் 2 தொழிலாளிகள் பலி

திருப்பூர், மார்ச் 8 -
திருப்பூரில் லாரி - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளிகள் 2 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்த வேலுசாமி (45), அய்யன் நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி (35), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகலில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளனர், அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி வேலுசாமி, கருணாநிதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த திருப்பூர் மத்திய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

;