tamilnadu

img

திருமூர்த்தி அணையை தூர்வார அரசு அனுமதி விவசாயிகள் மகிழ்ச்சி

 உடுமலை, ஜூலை 30- திருமூர்த்தி அணையை தூர்வார அரசு அனுமதியளித்துள்ளது. இத னால் விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.   திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிற்றா றுகள், ஓடைகள் நீர் ஆதாரமாக விளங்கி வருகின்றது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. அது மட்டுமின்றி குடி மங்கலம், மடத்துக்குளம், கணக்கம் பாளையம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாக சுற்றுப் புற கிராமங்கள் பயனடைந்து வரு கின்றன.  இந்நிலையில் திருமூர்த்தி  அணை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக தூர்வாரப் படாமல் உள்ளது. இதனால் அணையின் மொத்த கொள்ளள வான 60 அடியில், சுமார் 15 அடிக்கும் மேலாக சேறும் சகதியு மாக நிரம்பியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து அணையை தூர்வாரும்படி விவ சாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் திரு மூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்றன. ஆனால் ஒரிரு நாட் களில் மழைப்பொழிவு ஏற்பட்டு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்ட தால் தூர்வாரும் பணிகள் பாதியிலே  நிறுத்தப்பட்டது. அதன் பின்பு அணைகளில் தூர்வாரும் பணிகள் இதுவரையில் நடைபெறவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இது வரை சரிவர பெய்யவில்லை. இதன் காரணமாக திருமூர்த்தி அணையின்  மொத்த நீர்ப்பரப்பில் சுமார் 14  அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.  இதனால் அணையின் பெரும் பாலான பகுதிகள் மணல் திட்டு களாகவும், பாறைகளாகவும் காட்சி அளிக்கிறது. இதை சாதகமாக கொண்டு அணையை தூர்வார அனுமதி அளிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணை, உப்பாறுஅணை, பெரிய குளம், கரிசல்குளம், வளைய பாளையம்குளம் உள்ளிட்ட நீரா தாரங்களில் தேங்கியுள்ள வண்டல்  மண்ணை விவசாயிகள் எடுத்துக் கொள்வதற்கு தமிழக அரசு உத்த ரவு பிறப்பித்துள்ளது. இதில் திரு மூர்த்தி அணையில் 50 ஆயிரத்து 600  கனமீட்டரும், உப்பாறு,அணை யில் 29 ஆயிரத்து 579 கன மீட்டரும், பெரியகுளத்தில் 99  ஆயிரத்து கனமீட்டரும், கரிசல் குளத்தில் 18 ஆயிரத்து 750 கன மீட்டரும், வளையபாளையம் குளத்தில் 7 ஆயிரத்து 900 கன மீட்டரும் வண்டல் மண் எடுப் பதற்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இதனால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களில் தூர் வாரும் பணிகள் நடைபெறும். இதன் காரணமாக அதில் கூடுத லாக தண்ணீரை சேமிக்க முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தூர் வாரும் பணிகளை விரைவில் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.