tamilnadu

அறிவியல் இயக்க மாநில மாநாடு இன்று தொடக்கம்

திருப்பூர், ஆக. 8 – தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் 20ஆவது மாநில மாநாடு திருப் பூரில் இன்று (ஆக.9) தொடங்குகி றது. இம்மாநாட்டை முன்னிட்டு கடந்த 6ஆம் தேதி முதல் நடத்தப் பட்டு வரும் கல்வித் திருவிழாவில் ஆயி ரக்கணக்கான இளம் மாணவர்கள் அறிவியல் புதுமைகளின்பால் ஈர்க் கப்பட்டனர். அறிவியல் இயக்கத்தின் 20ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு கடந்த 6ஆம் தேதி காந்திநகர் ஏவிபி மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கல்வித் திருவிழா நடைபெற்று வரு கிறது. முதல் நாள் இந்த திருவிழாவை ஏவிபி பள்ளிக் குழுமத் தாளாளரும், ரோட்டரி ஆளுநருமான கார்த்தி கேயன் தொடங்கி வைத்தார். அன்று சென்னை சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வி.எஸ்.ஐயப்பன் பங்கேற்று சுமார் 800 மாணவர்களுடன் அறிவியல் குறித்துக் கலந்துரையாடினார்.  இரண்டாம் நாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி கோவை வேளாண்மைப் பல்கலைக் கழக விஞ்ஞானி ராம்குமார் தியோடர் சுமார் 1000 குழந்தைகளி டம் வேளாண்மை குறித்து கலந்துரை யாடினார். குறிப்பாக மனித சமுதா யத்திற்கு உணவு உற்பத்திக்கு வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை வேளாண்மை, நவீன கண் டுபிடிப்புகள் பற்றி ஆர்வத்தைத் தூண்டும் வகையில் விரிவாக எடுத் துரைத்தார். இதைத் தொடர்ந்து சேலம் வேளாண் துறையைச் சேர்ந்த அறிஞர் மனவழகன் பங்கேற்று குழந்தைக ளுக்கு தன்னம்பிக்கை பற்றி கருத் துரை ஆற்றினார்.  மூன்றாம் நாளான வியாழக் கிழமை அமெரிக்காவின் நாஸா ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி மனோகரன் பங்கேற்று தனது ஆராய்ச்சி, கண்டு பிடிப்பு ஆகியவற்றை விளக்கி குழந் தைகள் கேள்வி கேட்பது, ஆய்வு செய்யும் முறை பற்றி விளக்கினார். இதையடுத்து  மருத்துவ ஆராய்ச்சி விஞ் ஞானி மாரியப்பன் பங்கேற்று சிக்கன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்த் தாக்குதல் வட இந்தியாவில் இருந்து இங்கு பரவியது பற்றி விளக்கினார். மாணவர்களுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்வுடன், ஏவிபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி யும் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 10 அரங்குகள் அமைக்கப்பட்டிருற் தன. இதில் குறிப்பாக கூடங்குளம்  அணு உலை அமைப்பின்  மாதிரி வடிவமைப்பு வைக்கப்பட்டு அது செயல்படும் விதம், பாதுகாப்பு ஏற் பாடுகள் பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது. அத்துடன் நியூட் ரினோ ஆய்வு பற்றி அறிவியல்பூர்வ விபரங்கள் தனி அரங்கிலும், எளிய அன்றாட அறிவியல் பயன்பாடுகள் பற்றி ஒரு அரங்கிலும், வேளாண்மை கண்டுபிடிப்புகள், மன்னார் வளை குடாவில் பவளப்பாறைகள் உள் ளிட்ட அரிய வளங்கள் குறித்த   அரங்குகளும் அமைக்கப்பட்டிருந் தன. இந்த அறிவியல் கண்காட்சியை கடந்த மூன்று நாட்களில் ஏறத்தாழ 3000 மாணவர்கள் கண்டு களித்த னர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்தது மாணவ, மாண விகள் இந்த கல்வித்  திருவிழாவில் பங்கேற்றனர்.  மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறும் இக்கல்வித் திருவிழா ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை நிறைவடைகிறது என இந்கழ்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் வீரய்யா தெரிவித்தார். அறிவியல் இயக்க மாநில மாநாட் டின் தொடக்க நிகழ்வாக இன்று (ஆக.9) கல்லூரி சாலை சிக்கண்ணா கல்லூரி முன்பிருந்து மாற்றத்துக்கான அறிவியல் என்ற தலைப்பில் பேரணி தொடங்குகிறது. இப்பேரணி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முன்பாக  நிறைவடைகிறது. அங்கு பொதுக்கூட் டமும் நடத்தப்படுகிறது. ஆக.10, 11 ஆகிய தேதிகளில் சிறுபூலுவபட்டி அம்மன் கலையரங்கத்தில் பிரதி நிதிகள் மாநாடு நடைபெறுகிறது.