tamilnadu

ஓலைச்சுவடிகளை பாதுகாக்க பழைய முறையே சிறந்தது

 திருப்பூர், ஜூலை 29- ஓலைச் சுவடிகளை அழியாமல் பாதுகாக்க பழங்காலப் பாதுகாப்பு முறையே சிறந்தது என தொல்பொருள் ஆய்வாளரும் ஓலைச்சுவடி காப்பாளருமான சுந்தர கணேசன் கூறினார். திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 34ஆம் சந்திப்பு அண்மையில், செரீப்காலனி வாழ்க வளமுடன் மையத் தில் நடைபெற்றது. நேசனல் சில்க்ஸ் மற்றும் நேசனல் புத்தக நிலையம் உரிமையாளர் அருணாசலம் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் தொல்பொருள் ஆய்வாளரும், ஓலைச்சுவடி காப்பாளருமான சுந்தர கணேசன் பேசுகை யில் கூறியதாவது: ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு என்பது பழைய இலக்கியங்களையும், வரலாற்றுச் செல்வங் களையும் பாதுகாக்கும் முறை இன்றைக்கு அவசியமாகி விட்டது. கொங்குப் பகுதிகளில் உள்ள அவ்வகை ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும்.  சுவடிகள் பாதுகாப்பில் பழங்காலப் பாதுகாப்பு முறை, தற்காலப் பாதுகாப்பு முறை ஆகிய இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில், தற்கால பாதுகாப்பு முறை  எளிமையானதாக இருக்கின்றது. ஆனால் பக்கவிளைவு களை உண்டாக்கக் கூடியது. சுவடிகளை விரைவில் அழியும் நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியது. ஆனால் பழங்காலப் பாதுகாப்புமுறை சற்று கடினமானதாக இருப்பினும், சுவடிகளை நீண்ட நாட்கள் பாதுகாப்பதுடன், பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. எனவே சுவடிகளை அழியாமல் பாதுகாக்கப் பயன்படும் பழங் காலப் பாதுகாப்பு முறையே சிறந்தது என்றார்.