திருப்பூர், டிச.22- திருப்பூரில் தமிழ்ப் பண்பாட்டு மையம், சுப்ரீம் மொபைல்ஸ், அரிமா சங்கம் இணைந்து “ஓரி காமி” எனும் தலைப்பில் ஜப் பானிய தாள் மடிப்பு கலை பயிற்சி முகாமை நடத்தின. இந்த ஒரு நாள் பயிற்சி முகாம் குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க அரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் செந்தில்குமார் வர வேற்றார். இப்பயிற்சி வகுப்பில் 4-ஆம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர்க்கு தஞ்சையை சேர்ந்த பயிற்சியாளர் தியாக சேகர் கலந்து கொண்டு சிறப்புப் பயிற்சி வழங்கினார். நிகழ்வில் பயிற்சியாளர் குழந் தைகளுக்கு தொப்பி, நேரு தொப்பி, போலீஸ் தொப்பி என பல வகை தொப்பிகள் செய்ய சொல்லி கொடுத்தார். பின்னர் வண்ணத்தாள்களில் பட்டாம் பூச்சி, சுற்றி சுழலும் ஹெலி காப்டர், இறக்கை அசைக்கும் கொக்கு, மீன், படகு, கப்பல் போன்ற உருவங்களை செய்ய பயிற்றுவித்தார். இந்நிகழ்வு குறித்து பயிற்று நர் தியாக சேகர் கூறும்போது, ஓரிகாமி பொழுது போக்கிற்கு மட்டுமல்லாமல் அறிவியல், கணி தத்தை வளர்க்கும் கலை. மேலும் தாங்களே சில பொம்மைகளை உருவாக்குவதன் மூலம் மகிழ் வோடு தன்னம்பிக்கையும், கவனிக்கும் கூர்மைத் திறனும் குழந்தைகளுக்கு வளர்கிறது என்றார். இந்நிகழ்வில் 50க்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். நிகழ்வினை தமிழ்ப் பண் பாட்டு மைய ஒருங்கிணைப் பாளர் யோகி செந்தில் ஒருங்கி ணைத்தார்.