அவிநாசி, ஆக. 25- அவிநாசி அருகே குப்பாண்டபாளை யம் ஏ டி காலனி மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கு பாதை அமைத்துத் தர கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், குப்பாண் டபாளையம் ஊராட்சி, ஏ டி காலனியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக் காக குப்பாண்டம்பாளையம் குளத்திற்கு அருகே மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வா கம் இம்மயானத்தை சுற்றுச் சுவரும் ஏற் படுத்திக் கொடுத்துள்ளனர். ஆனால் முறையான பாதை வசதி இல்லை. இதனால் மழை காலங்களில் இறந்த வர்களின் சடலத்தை ஓடை பகுதியில் எடுத்து செல்வதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் கூறுகையில், கடந்த 2016ஆம் ஆண்டு மயானத்திற்கு பாதை அமைத்துத் தர வேண்டி, வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித் தோம். அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண் டனர். ஆனால் இதுவரை பாதை அமைத்துத்தர எந்தவிதமான நடவடிக்கை யும் இல்லை என்றார். இப்பகுதி மக்க ளின் இறுதி பயணத்திற்கு மயானத்திற் குப் பாதை அமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?