அவிநாசி, மார்ச் 12- அவிநாசி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப் புகளால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவ தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற் றோர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். அவிநாசி பகுதியில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரு கின்றன. இவற்றில் பொதுத் தேர்விற்காக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக் கப்படுவதாகவும், உடன டியாக கல்வித் துறை நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத் துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் கள் கூறியதாவது, தனியார் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் பள்ளியில் காலை மற்றும் இரவு நேரங்கள், விடுமுறை நாள்கள் உள் ளிட்டவைகளில் சிறப்பு வகுப்புகள் என இரவு 7.30 மணி வரை சிறப்பு வகுப் புகள் நடத்தப்படுகிறது. இதில் சில பள்ளிகளில் மாணவர்களை கட்டாயப் படுத்துகின்றனர். குறிப் பாக தேர்வு எழுதி வந்தா லும், அடுத்த தேர்வுக்காக இரவு அங்கேயே தங்கி சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளச் சொல்கின்றனர். இதனால் மாணவர்கள் மன ளைச்சலுக்கு ஆளாவது மட்டுமின்றி, உரிய நேரத் திற்கு உணவு அருந்தாலும் பாதிப்பிற்குள்ளாகி வரு கின்றனர். எனவே, இது போல சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதை கல்வித் துறை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.