tamilnadu

img

திருப்பூரிலிருந்து வெளியூர் பேருந்துகள் புறப்படும் இடங்கள் விபரம்

திருப்பூர், அக். 24 – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து இயக்கப்படும் வெளியூர் பேருந்துகள் எந்தெந்த இடத்தில் இருந்து புறப்படும் என்ற விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி புதிய பேருந்து நிலையம் பின்புறமுள்ள தனியார் இடத்தில் இருந்து திருச்சி, தஞ்சை, மயிலாடு துறை, புதுக்கோட்டை, சிதம்பரம், அறந்தாங்கி, வேளாங் கண்ணி, பட்டுக்கோட்டை ஆகிய வழித்தடப் பேருந்துகள் இயங்கும்.  புது  பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக் கல், ராமநாதபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல் வேலி, கன்னியாகுமரி வழித்தடப் பேருந்துகள் புறப்படும். குமார் நகர் பழைய வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலு வலக மைதானத்தில் இருந்து, அவிநாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம் மற்றும்  பெருமாநல்லூர் வழியாக ஈரோடு செல்லும் பேருந்துகள் புறப்படும். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்லடம் வழி ாக கோவை, ஈரோடு மற்றும் சேலம் செல்லும் பேருந்து கள் வழக்கம் போல் புறப்பட்டுச் செல்லும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப  வெளியூர் செல்லும் பய ணிகள் அந்தந்த பேருந்து நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.