tamilnadu

img

அவிநாசியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அவிநாசி, ஜூன் 11- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையின் சார்பில் பள்ளி  மற்றும் கல்லூரி மாணவ-மாணவி யர்களுக்கு தீத்தடுப்பு, பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  செவ்வாயன்று நடத்தப்பட்டது.  திருப்பூர் தீயணைப்பு துறையின்சார்பில்அவிநாசிஅருகே யுள்ள எம்.எஸ்.வித்யாலயா பள்ளியில், தீ விபத்தின் போது எந்தெந்த வழிகளில்,  எப்படி அணைக்க வேண்டும் என்பதை   தத்ரூபமாக விளக்கமளிக்கப்பட்டது.  இந்த விழிப்புணர்வு நிகழ்வில்,  குடிசையில் தீ பிடித்தால் அதில் சிக்கியவர் களை மீட்பது குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள தீத்தடுப்பு உபகரணங்களை கையாள்வது குறித்தும் மாணவ- மாணவியர்க்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. உயரமான கட்டி டங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும்  தீயணைப்பு வீரர்கள் செயல் முறை  விளக்கமளித்தனர். மேலும், தீ விபத்து ஏற்படும் போது   காற்றின் எதிர்ப்புற திசையில் இருந்து தீயை அணைக்க வேண்டும் எனவும், உடையில் தீப்பற்றிக் கொண்டால் அங்குமிங்கும் ஓடாமல் தரையில் படுத்து உருள வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகள் மாணவர்களிடையே தீய ணைப்புத்துறையினர் அறியுறுத்தினர்.   இந்த விழிப்புணர் நிகழ்வில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை  பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவியர் தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகளில் மாணவ, மாணவியர் தவறி விழுந்து பலியாகின்றனர். இதை தவிர்க்க  உரிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.  இதில் பள்ளி ஆசிரியர்கள், மாண வர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.