திருப்பூர், செப். 5- திருப்பூரில் விநாயகர் சிலை வாகனத்துடன் ஏற்றுமதி கம்பெனி வளாகத்தில் புகுந்த இந்து முன் னணி காலிகள் அலுவலகத்தை அடித்து நொறுக்கி உச்சகட்ட வெறி யாட்டம் நடத்தினர். இந்த ரௌடிக ளின் தாக்குதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர், 8 பேருக்கு சரமாரி அடி விழுந்தது. திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு சக்தி தியேட்டர் சாலை சந்திப்பில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிரில் வி. கே. கார் மண்ட்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 450 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வியாழனன்று கம் பெனி முன்பாக செக்யூரிட்டி வேல் முருகன் பணியில் இருந்தார். இந்த கம்பெனிக்கு சுமார் 100 அடி தொலைவில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை வைத்திருந்தனர். அவர்கள் சிலையை கரைப்பதற்காக வாக னத்தில் ஏற்றிக் கொண்டு சுமார் 60 பேர் புறப்பட்டனர். அவர்கள் நேராக இந்த கம்பெனிக்கு வந்து செக்யூரிட்டி வேல்முருகனிடம் கதவைத் திற என கூச்சலிட்டு அவ ரைத் தாக்கினர். தொடர்ந்து கதவை அந்த கும்பல் எட்டி உதைத்து திறந்து கொண்டு உள்ளே கூச்ச லிட்டுக் கொண்டே வந்தனர். செக்யூ ரிட்டியின் கண்ணாடி அறை, கம் பெனியின் கதவு, கண்ணாடி ஜன் னல்களை அடித்து நொறுக்கினர். இதைப் பார்த்து கம்பெனியில் இருந்த பெண்கள் உள்ளிட்ட பணி யாளர்கள், தொழிலாளர்கள் அல றியடித்து தப்பி ஓடி ஒளிந்தனர். 60 ரௌடிகள் தாக்குதல் நடத்தியதில் அந்த இடம் சின்னாபின்னமானது. இந்த பயங்கர தாக்குதலில் கம் பெனி உற்பத்தி மேலாளர் ராம மூர்த்தி (30) மண்டை உடைந்தது. மெக்கானிக் சிவக்குமார் (40) பலத்த காயம் அடைந்தார். பெரிய கற்கள், பிளாஸ்டிக் பைப், கண் ணாடி துண்டுகளை சரமாரியாக தூக்கி வீசியதில் பலருக்கு அடி விழுந்தது. மொத்தம் எட்டு பணியாளர்கள் காயமடைந்தனர். முன்னதாக சாமிக்கு 10 ஆயிரம் ரூபாய் தரமுடியாதா என கூச்சலிட்டு இந்த வன்முறை வெறியாட்டத்தை இந்து முன்னணி காலிகள் நடத்தி னர். கம்பெனி முதலாளி சுரேஷ் இந்த சம்பவத்தைப் பார்த்து ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டபோது அவரையும் அந்த கும்பல் தாக்கு வதற்கு பாய்ந்தது. கம்பெனி பணி யாளர்கள் அவரை பாதுகாத்து உள்ளே அழைத்துச் சென்றனர். ரௌடிகள் அனைவரும் மது போதை யில் வெறித்தனமாக தாக்கினர் என்று சம்பவத்தைப் பார்த்த பெண்கள் மருட்சியுடன் கூறினர். இந்த வன் முறை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப் பட்டு உள்ளது. திருப்பூர் பின்ன லாடை தொழில் வரலாற்றில் இது போன்று பயங்கர வெறியாட்டம் தொழிற்சாலைகள் மீது நடத்தப்பட்ட தில்லை என தொழில் துறையினர் கூறுகின்றனர்.