வெள்ளக்கோவில், ஜன.20-
வெள்ளக்கோவில் அருகே பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் இயந்திரம் மற்றும் பஞ்சுகள் சேதமடைந்தன.
வெள்ளக்கோவில் அருகே காடையூரான்வலசு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான பஞ்சு மில் இன்று வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் வந்த வெள்ளக்கோவில் தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில் ஒரு இயந்திரம் மற்றும் பஞ்சுகள் தீயில் கருகி சேதமடைந்தன.
மேலும், இந்த தீவிபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.