அவிநாசி அருகே குளத்துப் பாளையத்தில் செயல்பட்டு வரும் பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகி மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளி தவறாகப் பேசியதைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்திப் பேசிய மகாவிஷ்ணுவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ஜெயபால் தலைமை வகித்தார் இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி .ராஜேஷ் அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பவித்ரா தேவி ,மாவட்ட தலைவர் சரஸ்வதி முன்னாள் மாவட்ட தலைவர் சாவித்திரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மாவட்ட பொருளாளர் பாலமுரளி மாதர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய செயலாளர் செல்வி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய பொறுப்பாளர் ஆர் பழனிசாமி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஏ லோகநாதன் பி. ரோஸி பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோசம் எழுப்பி தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
மேலும் பரம்பொருள் அறக்கட்டளை உரிமையாளரை மகாவிஷ்ணுவை அறக்கட்டளையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்