tamilnadu

img

ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் !

திருப்பூரில் நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்து தனது நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு அளித்துள்ளார். 
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சம்மாளுக்கு கஞ்சம்பாளையம் பகுதியில் சுமார் 5 கோடி மதிப்பிலான 70 சென்ட் நிலம் உள்ளது. இவரது நிலத்தின் அருகில் பாஜகவின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சின்னசாமி என்பவருக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்துள்ளது.
இந்நிலையில் அரசியல் பின்புலத்தை காட்டி மிரட்டி மூதாட்டி நஞ்சம்மாளின் 70 சென்ட் நிலத்தை பாஜக பிரமுகர் சின்னசாமி அபகரித்தார். மேலும் மூதாட்டியை அடியாட்களை வைத்து அப்புறப்படுத்தினார். .
இதனையடுத்து, தன்னை ஏமாற்றி தன்னுடைய நிலத்தை அபகரித்த பாஜக நிர்வாகி சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் ஆணையரிடமும் பல்வேறு அதிகாரிகளிடமும் மனு கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் நஞ்சம்மாள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித்திடம் தன்னுடைய நிலத்தை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தார்.
மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

;