tamilnadu

img

தாராபுரத்தில் அ.கணேசமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பு

தாராபுரம், ஏப் 5 -

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி தாராபுரம் நகர்ப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் இருந்து திறந்த ஜீப்பில் அ.கணேசமூர்த்தி பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பொள்ளாச்சிரோடு, நேருநகர், நாடார்தெரு, காமராஜபுரம், பெரியகடைவீதி, பீமர் மெயின் வீதி, பெரியகாளியம்மன் கோவில் வீதி, அனுமந்தாபுரம், ஐந்து முனை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன், நகர செயலாளர் தனசேகர், சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, மதிமுக நகர செயலாளர் சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் கவின்நாகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். 

;