tamilnadu

பெருமாநல்லூரில் ரூ1 லட்சம் பறிமுதல்

அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வியாழனன்று பறிமுதல் செய்தனர். அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனர். இதில் காரில் வந்த ரியல் எஸ்டேட் தொழிலாளியிடம் உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவிநாசி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தார்.

;