tamilnadu

img

தேர்தல் நிதியாக ஒரு மாத ஓய்வூதியம்.... பிருந்தா காரத்திடம் வழங்கிய சலீம் முகமது....

திருநெல்வேலி:
நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக  கடந்த 28ஆம் தேதி  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வருகை தந்தார். அந்த பொதுக்கூட்டம் நிறைவுபெற்ற பின்னர் மேடையில்  கட்சியின்தென்காசி மாவட்டக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவருமான தோழர் சலீம்  முகமது மீரான், பிருந்தாகாரத்திடம் தனது ஒரு மாத ஓய்வு ஊதியம்  ரூ. 25 ஆயிரத்தை தேர்தல் நிதியாக வழங்கினார்.இந்த நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி மாவட்டச் செயலாளர் உ.முத்துப்பாண்டியன் , வட்டாரச் செயலாளர் அயூப்கான், வட்டாரக் குழு உறுப்பினர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;