மயிலாடுதுறை, ஜூன் 15- மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்லூரி பேராசிரியர்களுக்கு ஐ.க்யூ.ஏசி சார்பில் மூன்று நாள் பணி மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. கடந்த 13-ம் தேதி தொடங்கிய முதல் நாள் முகாமில் கல்லூரியின் பல்கலைகழக பிரதிநிதியும், கல்லூரி குழு உறுப்பினருமான டாக்டர் எஸ்.சேகர் பேசினார். இரண்டாம் நாளில் பூம்புகார் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் பி.அசோக்குமார் மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு பயிற்றுநர் எம்.எஸ்.சரண் பயிற்சி அளித்தனர். நிறைவு நாள் முகாமிற்கு செயலர் கே.கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதல்வர் ஆர்.நாகராஜன், டீன் எஸ்.மயில்வாகணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்வதேச மனிதவள மேம்பாட்டு பயிற்றுநர் வி.இராமன் மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் அமலன் ராபர்ட் பயிற்சியளித்தனர். நிறைவாக பேராசிரியர் டி.வெங்கடேசன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை ஐ.க்யூ.ஏசி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.கோவிந்தராசு செய்திருந்தார்.