tamilnadu

அறிவிக்கப்படாத மின் வெட்டு

திருநெல்வேலி, ஜூலை 7- சங்கரன்கோவில் மின்வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டி ருந்தது.  அதன்படி காலை 9 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பிற்பகல் ஒரு மணிக்குப் மின் விநியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் சங்கரன்கோவில் விசைத்தறித் தொழிலாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இல்லாததால் விசைத்தறித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மின்சாரத்தை நம்பியுள்ள சிறு, குறு தொழில்களும் பாதிக் கப்பட்டன.