தஞ்சாவூர், ஜூன் 19- திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில், 3 பெட்டிகளுடன் தின சரி ரயில் சேவை ஓரிரு நாள்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரி விக்கின்றன. திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில், அகலப் பாதைப் பணி கள் அண்மையில் முடிவடைந்தன. இதையடுத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, பின்னர் டெமு ரயில் சேவையானது ஜூன் 1 முதல் தொடங்கியது. டெமு ரயில் என்பது புறநகர் பகுதிகளில் தென்னக ரயில்வேயால் செயல்படுத்தப்படு கிறது. அதாவது, ரயில் பெட்டியுடன் இணைந்து என்ஜின் காணப்படுவ தோடு, ரயிலின் இரு முனைகளிலும் இணைந்து என்ஜின் இருக்கும். ரயிலின் இரு புறங்களிலும் என் ஜின் இருப்பதால், மறுமார்க்கத்திலி ருந்து ரயில் புறப்படும்போது, ரயி லிலிருந்து என்ஜினை கழட்டி மாட்ட வேண்டிய வேண்டிய அவசியம் இருக்காது. திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்திலும் 6 பெட்டிகளுடன் டெமு ரயில் இயங்கி வருகிறது. கேட் கீப்பர்கள் இல்லாததால், மொபைல் கேட் கீப்பர்கள் மூலம் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத னால், திருவாரூரிலிருந்து காரைக் குடி செல்வதற்கு 7 மணி நேரத்துக் கும் மேலாக எடுத்துக் கொள்ளப்படு வதால், ரயில் சேவையானது 3 நாட் களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரி லிருந்து காரைக்குடிக்குச் செல்லும் ரயிலானது, அங்கிருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காரைக்குடியிலிருந்து திருவாரூ ருக்கு வருகிறது. எனினும், இந்த ரயில் சேவை மக்களுக்கு கொஞ்ச மும் பயனளிக்கவில்லை என புகார் தெரிவித்த பயணிகள், இதனால் ரயில்வேயுக்கும் எவ்வித வருமா னம் வராது எனவும் கருத்து தெரி வித்திருந்தனர். இந்நிலையில், திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் 6 பெட்டி களுடன் செல்லும் டெமு ரயிலை, தலா 3 பெட்டிகளுடன் இயக்குவது என ரயில்வே நிர்வாகம் முடி வெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 3 பெட்டிகளுடன் திருவாரூரிலிருந்து காலையில் ரயில் புறப்படும்போது, காரைக்குடியிலிருந்து 3 பெட்டி களுடன் ரயில் புறப்படும். இரண் டும், பட்டுக்கோட்டையில் சந் தித்துக் கொண்டபின், தங்கள் நிலையங்களுக்குச் செல்லும். பின் னர் மறுநாள், இதேபோல் திரு வாரூர் மற்றும் காரைக்குடியிலி ருந்து ரயில் சேவை நடைபெறும். இதன்மூலம் தினசரி ரயில் சேவை யை, இரு மார்க்கத்திலும் வழங்க முடியும் என்பதால், ஓரிரு நாள்க ளில் இந்த முறையில் ரயில் சேவை நடைபெற உள்ளதாக ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின் றன.