tamilnadu

விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

வேலூர், மே 8-கிணறு தூர் வாரிய தொழிலாளி விஷ வாயு தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு முருகன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் வடிவேல்(28). ஓங்குப்பம் சாலை அம்பேத் கர் நகரை சேர்ந்தவர் பாரத்(25), பாகர் உசேன் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்(27). நண் பர்களான 3 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில், வடிவேல் உட்பட 3 பேரும் அம்பேத்கர் நகரில் வசிக்கும் பன்னீர் என்பவரது வீட்டில் உள்ள கிணற்றை தூர்வார சென்றனர். 60 அடி ஆழமுள்ள கிணற் றில் முதலில் வடிவேல் இறங்கினார். அப்போது அவர் திடீரென மயங்கி கிணற்றில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாரத், கிணற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், அவரும் மயங்கி னார்.இதையறிந்த சுபாஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் பேரணாம்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வடிவேலை சடலமாக மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த பரத்தை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷ வாயு தாக்கியதில் வடிவேல் இறந்துள்ளதாக தெரியவந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம் பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வடிவேலுவுக்கு ரஞ்சனி என்ற மனைவியும், பூவரசன்(2), 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிணற்றை தூர்வாரிய போது விஷவாயு தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;