பெரம்பலூர், ஜூலை 4- பெரம்பலூர் நகரில் 150 ஏக்கர் பரப்ப ளவும் 350 ஏக்கர் பாசன வசதியும் கொண்ட வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த ஏரியை தூர்வார மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மாவட்ட மக்கள் சமூக நல கூட்டமைப்பு சார்பில் நீர் நிலைகளில் நீர் ஆதாரம் பெருக ஏரியை தூர்வார முடிவு செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் பொக்லைன் எந்திரம் கொண்டு ஏரி கள் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதில் நகராட்சி துப்புரவு பணியா ளர்களும் பங்கேற்றனர். தன்னார்வ லர்களான ஊர்க்காவல்படை மண்டல தளபதி அரவிந்தன், ஜெய்பிரகாஷ், வேல்முருகன், செந்தில்குமார், லோக நாதன் ஆகியோர் மூலம் உதவி பெற்று பொக்லைன் எந்திரம் கொண்டு வெள் ளந்தாங்கி அம்மன் ஏரியை தூர்வா ரும் வகையில் 6 பொக்லைன் எந்தி ரங்களைக் கொண்டு முட்புதர்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி கடந்த 26-ம் தேதி முதல் நடை பெறுகிறது. தற்போது ஏரியில் உள்ள முட்பு தர்கள் உள்ளிட்டவை முழுமையாக அகற்றப்பட்டது. இதில் மக்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் கண்ண பிரான், பூக்கடை சரவணன், சத்யா, டாக்டர் விஜய் ஆனந்த், ரமேஷ்பாண் டியன், முத்துக்குமார், சாதிக்பட்சா, கண்ணன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.