tamilnadu

img

டாஸ்மாக் பாராக மாறிய பேருந்து நிறுத்தக் கட்டடம்

சீர்காழி: சீர்காழி அருகே ஆரப்பள்ளம் பேருந்து நிறுத்தக் கட்டடத்திற்குள் குவிந்துள்ள உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம், நல்லூர், ஆரப்பள்ளம் வழியாக புளியந்துறை மற்றும் புதுப்பட்டினத்திற்குச்  செல்லும் நெடுஞ்சாலையில் ஆரப்பள்ளத்தில் பேருந்து நிறுத்தக் கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்திற்குள் கடந்த ஒரு வருட காலமாக டாஸ்மாக் மது அருந்துபவர்களின் பார் போலாகிவிட்டது. மேலும் பாட்டில்களை உடைத்து குவிக்கப்பட்ட பாட்டில் ஓடுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒன்று சேர்ந்து குவியலாகச் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.  இதே போல் தொடர்ந்து குப்பைகள் போடப்பட்டதால் பயணிகள் அங்கு காத்திருக்க முடியாமல் சாலை ஓரம் நின்று பேருந்துக்கு காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது. எனவே பேருந்து நிறுத்தத்தில் உள்ள அசுத்தமான குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.