tamilnadu

ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுத்திடுக!

தஞ்சாவூர், ஜூன் 26- தஞ்சாவூர் மக்களவை உறுப்பி னர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை, பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்க நிர்வாகிகள் ஏ.மெய்ஞானமூர்த்தி, ஏ.கே.பழனிவேல், சி.கணேசன், கே.வி.கிருஷ்ணன், பாரதி வை.நட ராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அம்மனுவில் கூறியிருப்பதாவது: “காரைக்குடி - திருவாரூர் மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில்பாதை யாக மாற்றி அமைக்கும் பணிக்காக 2012-ம் ஆண்டு ரயில் சேவை நிறுத் தப்பட்டது. தற்போது 7 ஆண்டு களுக்குப் பிறகு பணி முடிக்கப்பட்ட நிலையில், முறையாகவும், முழு மையாகவும் ரயில் சேவை தொடங்கப் படவில்லை.  போதிய அளவில் ஸ்டேஷன் மாஸ்டர், கேட் கீப்பர் மற்றும் ரயில்வேத் துறை பணியாளர்களை நியமிப்ப தோடு, தினசரி நான்கைந்து முறை, ரயிலை இயக்க வேண்டும். மேலும் இராமேஸ்வரம்-சென்னை போன்ற இடங்களுக்கும் ரயில் சேவை தொடங்க வேண்டும். காரைக்குடி - திருவாரூர் இடையிலான பயண நேரம் 6 முதல் 8 மணி வரை ஆகிறது. ரயில்வே கேட்டை மொபைல் கேட் கீப்பர்கள் திறந்து மூடிச் செல்வதால், காலதாமதம் ஆகிறது. எனவே ஏற்கனவே இருந்தது போல் பயண நேரத்தை 3 மணி நேரமாக அமைத்து தர வேண்டும்.  இதுகுறித்து தாங்கள் நாடாளு மன்றத்தில் குரல் எழுப்புவதோடு, உரிய நடவடிக்கை எடுத்து, தினசரி கூடுத லாக ரயில்களை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;