tamilnadu

img

நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேட்டை கண்டித்து போராட்டம்

பெரம்பலூர், ஜூன் 4-பெரம்பலூர் மாவட்டம் வேப் பந்தட்டை தாலுகா மற்றும் குன்னம்தாலுகா வேப்பூர் ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.வேப்பந்தட்டையில் விதொச மாவட்டக்குழு உறுப்பினர் ராமு தலைமை வகித்தார். விதொச மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் மாதர் சங்க நிர்வாகி எ.கலையரசி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீராசாமி, தேவகி, மதுரைவேணி, ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அ.பழநிசாமி சிறப்புரை ஆற்றினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஆயிரத்து 228 பேர் நூறு நாள்வேலை கேட்டு மனு கொடுத்தனர். அப்போது, மிக விரைவில் பணிஆணை பெற்று வேலை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதனைதொடர்ந்து மாநிலச்செயலாளர் பழநிசாமி கூறுகையில், இதுகுறித்து 15 நாட்களுக்குள்நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும். ஜூன் 25-ல் மாநில அளவில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதே போன்று குன்னம் தாலுகாவேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மனுக் கொடுக்கும் போராட்டத்திற்கு மத்தியக்குழு உறுப்பினர் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டதுணை செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் நிர்வாகிகள் எஸ்.ஆறுமுகம், இளங்கோவன், பெரியசாமி, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 106 பேர் நூறு நாள் வேலை கேட்டு மனு அளித்தனர். நூறு நாள் வேலை கேட்டு வரும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சட்டக்கூலி 220 ரூபாய் குறையாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.