tamilnadu

img

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

அரியலூர், பிப்.17- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரியில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மகளிர் திட்டம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு  மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.  இதற்கு ஆட்சியர் தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.  நிகழ்வில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் முருகண்ணன், வட்டாட்சியர் துரை, கே.கே.சி கல்வி நிறுவன தலைவர் கே.கே.சி.செந்தில்குமார், க.சொ.க பாலிடெக்னிக் நிர்வாக இயக்குநர் மரு.மாலதி கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.