tamilnadu

கிராம சுகாதார செவிலியர்  காலிப் பணியிடம் 

 திருச்சிராப்பள்ளி, செப்.21- மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 1234 கிராம சுகாதார செவிலியர்(பெண்கள்) பணிக் காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண் பதிவுதாரர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.  இப்பணியிடங்களுக்கு துணை செவிலியர் மருத்துவச்சி- பல்நோக்கு சுகாதார பணியாளர்(பெண்கள்) கல்வித் தகுதியினை மருத்துவத் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். வயது வரம்பு 1.7.2019 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. பகிரங்க போட்டியாளருக்கு(ஓ.சி) உச்ச வயது வரம்பு 40 ஆகும்.  இக்கல்வித் தகுதியிற்கு உட்பட்ட பெண் பதிவுதாரர்கள் மட்டும் வரும் 23-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, வட்டாட்சியர்(மேற்கு) அலுவலகத்திற்கு பின்புறம், திருச்சிக்கு நேரில் அனைத்து சான்றிதழ்களுடன் வருகை தர வேண்டும் என திருச்சி ஆட்சியர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.