tamilnadu

img

விமான நிலையத்தில் பயணிகள் ஆட்டோ தடையை நீக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 24- திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சிவ ராசு தலைமையில் திங்களன்று நடை பெற்றது. கூட்டத்தில் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர் சங்கம் சார்பில் பொதுச்செய லாளர் மணிகண்டன், ஆட்சியரிடம் அளித்த மனுவில், கடந்த 5 மாதமாக திருச்சி விமான நிலையத்தில் பய ணிகள் ஆட்டோ நுழைய தடை விதித் துள்ளது. அந்த தடையை நீக்கி பயணி களை ஏற்ற, இறக்க அனுமதிக்க வேண்டும். மலைக்கோட்டை என்எஸ்பி சாலை யில் பயணிகள் ஆட்டோவை அனு மதிக்க வேண்டும். அங்கு போக்கு வரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக நிற்கும் ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவை அதில் கூறப்பட்டிருந் தது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் சந்திரன், பகுதி செயலாளர்கள் ஸ்ரீரங்கம் வெற்றிவேல், பொன்மலை ராஜலிங்கம், காட்டூர் சார்லஸ், மாவட்ட நிர்வாகி கிரேஸி ஆகியோர் உடனி ருந்தனர்.

;