தரங்கம்பாடி ஆக.9- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட மாநாடு, வட்டத் தலைவர் மாரி.தெட்சிணாமூர்த்தி தலைமையில் நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பரசலூரில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ட்டி.அன்பழகன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் தியாகராஜன்,வட்ட செயலாளர் வாசுகி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேந்திரன், எம்.சிஜீவா, வட்டார தலைவர் மனோகரன் உரையாற்றினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவரும்,அரசு ஊழியர் சங்க மாநில தலைவரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான மு.சுப்ரமணியன் மீது உலா வரும் கலங்கத்தை துடைத்து உண்மை நிலையை வெள்ளை அறிக்கையாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மையம் வெளியிட வேண்டும். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், தரங்கம்பாடி- மயிலாடுதுறை இடையிலான ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்கிடு உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. புதிய வட்டத்தலைவராக மாரி.தெட்சிணாமூர்த்தி, செயலாளராக வாசுகி,பொருளாளராக சத்யா,துணைத்தலைவர்களாக வெங்கடேசன்,அபிராமி, இணை செயலாளர்களாக நல்வமுத்து,சாம் செந்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினராக பொன்.இராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக வட்ட தணிக்கையாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.