அரியலூர், ஜூன் 9- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமமக்கள் 18 சித்தர்களிடம் தமிழகத்தைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தி வழிபாடு நடத்தினர். தற்போதைய சூழலில் தமிழகத்தில் பல்வேறு இயற்கைச் சூழலை அழிக்கும் வண்ணம் பேரழிப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டங்களை எல்லாம் தடுக்க தமிழக மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனாலும் மத்திய அரசு தமிழக நலன் மீது அக்கறை கொள்ளவில்லை. எனவே தமிழக மக்களின் நலன் கருதி தங்களது கோரிக்கைகளை முன் வைத்து வழிபாடு நடத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.