tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை

தஞ்சாவூர் செப்.20- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில், சார்-ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகளின் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.  கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு, உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 20 கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, இரு நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டார் வாகனம் கேட்டு மனு அளிக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் ஏ.பஹாத் முகமது, துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பேராவூரணி ஒன்றிய தலைவர் வின்சன் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் சுதாகரன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ஜலீல் முஹைதீன் கலந்து கொண்டனர். சுமார் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்  கலந்து கொண்டனர்.