tamilnadu

img

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

தரங்கம்பாடி, செப்.20- நாகை மாவட்டம்,மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதுகலை சமூக பணித்துறை, காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பு, மயிலாடுதுறை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாயவரம் ஜேசிஸ் சங்கம் இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி வியாழனன்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பேரணி துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சுவாமிநாதன் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதுகலை சமூகப் பணித்துறை தலைவர் சோபியா, பேராசிரியர்கள் சௌந்தரராஜன், மகேந்திரன், திவ்யா, இளநிலை உதவியாளர் சிவராமன், காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள் அகஸ்டின் விஜய், வழக்கறிஞர் சிவச்சந்திரன், சுந்தர், மயிலாடுதுறை கோட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாய்ராபானு, மாயவரம் ஜேசிஸ் சங்க தலைவர் பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கல்லூரி மாணவிகள் வழங்கினர். இதில் கல்லூரி முதுகலை சமூகப்பணி துறை மாணவிகள், அங்கன்வாடி உதவியாளர்கள் மற்றும் சேவை அமைப்புகளைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

;